Kathir News
Begin typing your search above and press return to search.

பழனி கோவிலில் வேல் வாங்குதல் நிகழ்ச்சியில் அறநிலையத்துறையின் குளறுபடி - நடைமுறையை மாத்த முயற்சி என பக்தர்கள் குற்றச்சாட்டு

பழனி மலைக்கோவிலின் நவராத்திரி விழாவில் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் கண்காணிப்பாளர், பக்தர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பழனி கோவிலில் வேல் வாங்குதல் நிகழ்ச்சியில் அறநிலையத்துறையின் குளறுபடி - நடைமுறையை மாத்த முயற்சி என பக்தர்கள் குற்றச்சாட்டு

Mohan RajBy : Mohan Raj

  |  5 Oct 2022 12:45 PM GMT

பழனி மலைக்கோவிலின் நவராத்திரி விழாவில் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் கண்காணிப்பாளர், பக்தர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பழனி மலைக்கோவிலில் செப்டம்பர் 27ஆம் தேதி காப்பு காட்டுதலுடன் நவராத்திரி விழா துவங்கியது. நேற்று உச்சிக்கலை பூஜை மதியம் 12 மணிக்கு, மதியம் 1:30க்கு நடந்தது பின்னர் பழனி ஆதீனம் புலிப்பாணி பத்ர சுவாமிகள் முறைப்படி போகர் சந்ததியிலிருந்து மலைக்கோவில் சன்னதிக்கு அழைத்து வர வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கவிருந்த நிலையில் புலிப்பாணி பத்ர சுவாமிகளை முறைப்படி கோவில் கண்காணிப்பாளர் அழைத்து வர வேண்டும் என பக்தர்கள் கூறினார்.

கோவில் நிர்வாகம் சார்பில் பேஸ்கர் அழைத்து வருவார் என தெரிவித்தனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பக்கதர்களும், இந்து அமைப்பினரும் பல ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் நவராத்திரி நிகழ்ச்சியில் இந்த ஆண்டு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோயில் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது கண்காணிப்பாளருக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து துணை கமிஷன் நடராஜன் பேச்சு வார்த்தை நடத்திய பின் டி.எஸ்.பி சிவசக்தி தலைமையில் போலீசார் உதவியுடன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News