Kathir News
Begin typing your search above and press return to search.

டி.ஜி.பி.க்கள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு.!

டி.ஜி.பி.க்கள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு.!

டி.ஜி.பி.க்கள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Feb 2021 7:51 PM GMT

தமிழகத்தில் பணியாற்றும் டி.ஜி.பி.க்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிறப்பு கூடுதல் டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் பரப்புரையின்போது பெண் எஸ்.பி.யிடம் தவறுதலாக சிறப்பு கூடுதல் டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் நடந்து கொண்டார் என்று அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாலியல் புகாருக்கு ஆளான டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், மேலும் சில ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் திருவாரூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சிறப்பு டி.ஜி.பி. கரன்சின்ஹா காவல் பயிற்சிகல்லூரி சிறப்பு டி.ஜி.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில டி.ஜி.பி.க்கள் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News