Kathir News
Begin typing your search above and press return to search.

தருமபுரியில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக புகார்: நேரடியாக ஆய்வு செய்த பா.ம.க. எம்.எல்.ஏ.!

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரேஷனில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தருமபுரியில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக புகார்: நேரடியாக ஆய்வு செய்த பா.ம.க. எம்.எல்.ஏ.!

ThangaveluBy : Thangavelu

  |  9 Jun 2021 8:42 AM GMT

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரேஷனில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதே போன்று நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட பூரிகள் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அரிசி தரமற்றதாக வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி அப்பகுதி மக்கள் தருமபுரி பாமக எம்.எல்.ஏ., எஸ்.பி.வெங்கடேஸ்வரனிடம் புகார் அளித்துள்ளனர்.




இந்த புகாரை தொடர்ந்து எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் நேரடியாக பூரிகள் ரேஷன் கடைக்கு சென்று அரிசியை ஆய்வு செய்தார். இதன் பின்னர் அரிசி தரமற்றதாக இருந்ததால், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.




இதனை தொடர்ந்து ரேஷன் கடைக்கு நல்ல அரிசி வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News