Kathir News
Begin typing your search above and press return to search.

அரசியல் முடிவை அறிவிக்க, விருப்ப ஓய்வு கேட்டாரா சகாயம்? அரசு பணியிலிருந்து விடுவிப்பு!

அரசியல் முடிவை அறிவிக்க, விருப்ப ஓய்வு கேட்டாரா சகாயம்? அரசு பணியிலிருந்து விடுவிப்பு!

அரசியல் முடிவை அறிவிக்க, விருப்ப ஓய்வு கேட்டாரா சகாயம்? அரசு பணியிலிருந்து விடுவிப்பு!

Muruganandham MBy : Muruganandham M

  |  7 Jan 2021 8:00 AM GMT

மக்கள் பாதை இயக்கம் என்ற அமைப்பில் இணைந்து செயல்பட்டு வரும் சகாயம், அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு கேட்டு மனு அளித்திருந்த நிலையில், தற்போது அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னமும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு அக்டோபர் 2ஆம் தேதி தமிழக அரசிடம் அவா் கடிதம் அளித்திருந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சகாயம், கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவியேற்றார். பின் பல மாவட்டங்களில் பணிபுரிந்த அவர், கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தோடு அவருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. இந்த நிலையிலேயே இனியும் அவர் பணியில் நீடிக்க விரும்பவில்லை என அப்போது சகாயம் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மக்கள் பணியில் ஈடுபட உள்ளது பற்றி விரைவில் அறிவிக்க உள்ளதாக விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில், விருப்ப ஓய்வு பெற்றுள்ள நான் மக்கள் பணியில் ஈடுபட உள்ளேன். அதுபற்றி ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News