Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சை: எல்லைச்சாமி சிலையின் தலை துண்டிப்பு! தி.மு.க ஆட்சியில் தொடரும் அட்டூழியம்!

தஞ்சை: எல்லைச்சாமி சிலையின் தலை துண்டிப்பு! தி.மு.க ஆட்சியில் தொடரும் அட்டூழியம்!

DhivakarBy : Dhivakar

  |  23 Jan 2022 12:10 PM GMT

தஞ்சாவூர் அருகே, "சூடாமணி முனியாண்டவர்" என்ற காவல் தெய்வ சிலையின் தலை, மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் அக்கோயில் பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது.


தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலமாக இந்து சாமி சிலைகளின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகியுள்ளது. அதற்குத் தக்க உதாரணம் சிறுவாச்சூர் தொடர் சாமி சிலைகள் உடைப்புச் சம்பவமே. இப்படி தொடர்ந்து இந்து மத அடையாளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தமிழகத்திலுள்ள இந்துமத உணர்வாளர்கள் மத்தியில் மன வேதனையடையச் செய்துள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி லயங்கரையிலுள்ள ஸ்ரீ சூடாமணி முனியாண்டவர் கோயில் என்பது அப்பகுதி மக்களுக்கு எல்லைக் கோயிலாக விளங்கி வருகிறது.


இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்களால், அக்கோயிலுள்ள ஸ்ரீ முனியாண்டவர் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது. சிலையின் மேல் அலங்கரிக்கப்பட்ட ஆடைகளும், புஷ்ப அலங்காரங்களும் கலைக்கப்பட்டு கிழித்தெறியப்பட்டது. இச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. உடனே அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறை சிலை உடைப்பின் பின்னணியை ஆராயத் தொடங்கியுள்ளது.

இப்படி தொடர்ந்து ஊர் எல்லைச் சாமிகளின் சிலைகள், மர்ம நபர்களின் தாக்குதலுக்கு ஆளாவதை தடுக்க தி.மு.க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News