Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா உயிரிழப்புகளுக்கு நிதி வழங்கப்படும் என்பது புரளி: அமைச்சர் மா.சுப்பிரமணியம்.!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்பது புரளி என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா உயிரிழப்புகளுக்கு நிதி வழங்கப்படும் என்பது புரளி: அமைச்சர் மா.சுப்பிரமணியம்.!

ThangaveluBy : Thangavelu

  |  11 Jun 2021 9:35 AM GMT

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்பது புரளி என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது கொரோனா தொற்றால் உயிரிழந்தால் ஒரு கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். தற்போது அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு கோடி வழங்கவே இல்லை. ஆட்சியில் இல்லாவிட்டால் ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்து விட்டால் ஒரு பேச்சு என்று பேசி வருபவர்கள் திமுகவில் உள்ளவர்கள்.





அதன்படி சென்னை அரும்பாக்கம் அரசினர் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். இதன் பின்னர் அவர் பேசும்போது, கொரோனா தொற்றால் உயிரிழந்தால் நிவாரண நிதி வழங்கப்படும் என்பது புரளி. எனவே இது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புரளியை பரப்பி வருகின்றனர் என கூறினார்.

அதிமுக ஆட்சியில் ஒரு கோடி கேட்ட திமுகவினர் தற்போது ஆட்சியில் அமர்ந்த பின்னர் குறைந்தபட்சம் நிவாரணம் நிதி வழங்குவதற்கே தயங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News