Kathir News
Begin typing your search above and press return to search.

250 ரூபாய்க்காக அ.தி.மு.க பிரமுகரை தாக்கிய தி.மு.க அமைப்பாளர்.!

250 ரூபாய்க்காக அ.தி.மு.க பிரமுகரை தாக்கிய தி.மு.க அமைப்பாளர்.!

250 ரூபாய்க்காக அ.தி.மு.க பிரமுகரை தாக்கிய தி.மு.க அமைப்பாளர்.!

Mohan RajBy : Mohan Raj

  |  3 Dec 2020 9:23 AM GMT

தி.மு.க கட்சியை சேர்ந்தவர்களின் அட்டகாசம் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காரணத்தாலும் இனியும் ஆட்சிக்கு வர இயலுமா என்ற சந்தேகத்தாலும் தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் பணம் பறிப்பு, ரவுடியிச செயல்கள், வியாபார நிறுவனங்களில் அடாவடி, பெண்களிடம் அத்துமீறல் என சமுதாய சீர்கேடுகளை செய்து வருகின்றனர்.

அந்ந வகையில் வெறும் 250 ரூபாய் பணத்திற்காக அ.தி.மு.க பிரமுகரை மூர்க்கமாக தாக்கிய தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் அருகே தலைஞாயிறை அடுத்த ஓரடியம்பலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி டேவிட் இளையராஜா, இவர் தி.மு.க'வில் தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளராக உள்ளார். நேற்று முன்தினம் இவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அந்ந வழியாக அ.தி.மு.க'வை சார்ந்த வாட்டாக்குடி சதீஷ் என்பவர் வந்துள்ளார்.

அப்பொழுது அ.தி.மு.க சதீஷிடம் தி.மு.க அந்தோணி டேவிட் இளையராஜா கட்சி தொடர்பாக தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் சண்டை முற்றியது.

அதன்பின் அ.தி.மு.க சதீஷை மூர்க்கமாக தாக்கிய தி.மு.க அந்தோணி டேவிட் இளையராஜா அவரிடம் இருந்ந 250 ரூபாயை பறித்துள்ளார். இதனால் காயமடைந்த அ.தி.மு.க சதீஷ் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அந்தோணி டேவிட் இளையராஜா'வின் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தி.மு.க அமைப்பாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 250 ரூபாய்க்காக அ.தி.மு.க பிரமுகரை தி.மு.க அமைப்பாளர் தாக்கிய விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News