Kathir News
Begin typing your search above and press return to search.

லிப்ட் கொடுப்பதாக காரில் ஏற்றி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தி.மு.க. பிரமுகர் போக்சோவில் கைது!

தென்காசி அருகே நடந்து சென்ற பள்ளி மாணவியை காரில் ஏற்றி பாலியல் துன்புறுத்தல் செய்த திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

லிப்ட் கொடுப்பதாக காரில் ஏற்றி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தி.மு.க. பிரமுகர் போக்சோவில் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  16 Nov 2021 8:45 AM GMT

தென்காசி அருகே நடந்து சென்ற பள்ளி மாணவியை காரில் ஏற்றி பாலியல் துன்புறுத்தல் செய்த திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ளது பலபத்திரராமபுரம் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி 35, இவர் திமுக பிரமுகர் ஆவார். இதனிடையே நேற்று காலை ஊரில் இருந்து தனது காரில் சின்னக்கோவிலான்குளத்திற்கு சென்றுள்ளார். அவரது காரில் திமுக கொடி கட்டப்பட்டுள்ளது. அப்போது மாவிலியூத்து என்ற இடத்தில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவியிடம் லாபகமாக பேசி காரில் ஊரில் கொண்டுபோய் விடுவதாக கூறியுள்ளார். இதனால் சிறுமி நடந்து செல்வதைவிட காரில் வேகமாக ஊருக்கு சென்றுவிடலாம் என்ற யோசனையில் ஏறியுள்ளார்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முத்துசாமி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் சாலையில் சென்றவர்களுக்கு கேட்கவே காரை பொதுமக்கள் வழிமறித்து நிறுத்தி, காரில் இருந்து முத்துசாமியை இழுத்துபோட்டு தர்மஅடி கொடுத்துள்ளனர். இதன்பின்னர் ஊத்துமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதனை விசாரித்த போலீசார் முத்துசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியை காரில் அழைத்து செல்வதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக பிரமுகரின் செயல் தென்காசி முழுவதும் உள்ள பெண்களிடம் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இது போன்று செய்வது முதன்முறை அல்ல, பல முறை சிறுமிகள் மற்றும் பெண்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar

Image Courtesy:She The People


Next Story
கதிர் தொகுப்பு
Trending News