Kathir News
Begin typing your search above and press return to search.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..! தி.மு.க எம்.எல்.ஏ சங்கரை கட்சி பதவியிலிருந்து தூக்கிய அறிவாலய மேலிடம்!

DMK removes Tiruvottiyur MLA KP Shankar from party post

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..! தி.மு.க எம்.எல்.ஏ  சங்கரை கட்சி பதவியிலிருந்து தூக்கிய அறிவாலய மேலிடம்!

Anand T PrasadBy : Anand T Prasad

  |  30 Jan 2022 5:46 AM GMT

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.சங்கரை கட்சி பதவியில் இருந்து நீக்கியது திமுக. அவர் தனது தொகுதியில் சாலை அமைக்கும் பணியை கவனித்து வந்த மாநகராட்சி பொறியாளரை தாக்கியதாக எழுந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக பல்வேறு நிர்வாகிகளை கட்சி நீக்கியிருந்தாலும், சிட்டிங் எம்எல்ஏ ஒருவரை அவரது கட்சி பதவியில் இருந்து நீக்குவது அரிது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு முரசொலியில் வெள்ளிக்கிழமை வெளியானது. அதில், அக்கட்சியின் திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் பதவியில் இருந்து சங்கர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முன், நோட்டீசுக்கு பதிலளிக்க நிர்வாகிகளுக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கட்சியின் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை திமுக தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர்"இந்த முடிவு ஜனநாயகம் அல்ல என்றாலும், இந்த உடனடி நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஏனெனில் இது ஆட்சியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்தும். அதுமட்டுமல்லாமல், தேவையற்ற நடத்தையை கட்சி மேலிடம் சகித்துக் கொள்ளாது என்ற நற்பெயரை பொது மக்களிடையே உருவாக்கி விடும்" என்றார்.

முன்னாள் மாவட்ட அளவிலான செயல்பாட்டாளர் ஒருவர் பேசுகையில், "முன்னதாக, கட்சி சட்டங்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட்டதால், திமுக செயல்பாட்டாளர்களை நீக்குவது அரிதாக இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், 'உடனடி நடவடிக்கை' பார்முலாவை பின்பற்றி வருகிறார் என தெரிவித்துள்ளார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News