அரக்கோணம் அருகே பெண் ஒருவருக்கு தி.மு.கவினர் பாலியல் தொந்தரவு !
By : Dhivakar
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் ஒருவர், திமுக பிரமுகர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அரக்கோணம் அருகிலுள்ள ஆனந்தபுறத்தை சேர்ந்தவர்கள் சூரியா,மோனிஷா என்ற தம்பதியினர். மோனிஷா வீட்டில் தனியாக இருந்த போது திமுக பிரமுகர்களான ராஜவேலு, வெங்கடேசன் மற்றும் செல்வம் ஆகியோர் மோனிஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து விட்டு வந்த மோனிகாவை இவர்கள் தகாத முறையில் சீண்டியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட மோனிஷாவின் கணவர் சூர்யாவை இவர்கள் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் மோனிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாலியல் தொல்லை கொலை மிரட்டல் விடுக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்ததாக கூறப்படுகிறது .
காவல் நிலையத்துக்கு சென்று வந்த மோனிக்கா நிருபரிடம் கூறியதாவது "வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை அவர்கள் என்னை பார்க்கும் பொழுதெல்லாம் கீழே கிடக்கும் கல்லை கொண்டு எறிந்து என்னை அடிக்கிறார்கள், எனது கணவரையும் இரும்புக் கம்பி கொண்டு தாக்கியுள்ளனர். இவர்களை எதிர்த்து காவல்நிலையத்தில் புகார் அளித்தாலும் எனது புகாரை காவல் துறை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஆளுங்கட்சியாக இருப்பதால் தாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி வருகின்றன" என்று வருத்தத்துடன் மோனிக்கா, நிருபருக்கு பேட்டி அளித்தார்.