Kathir News
Begin typing your search above and press return to search.

இருப்பிட சான்றிதழில் சந்தேகம்..? 4 பேரின் மருத்துவ கலந்தாய்வு ரத்து.!

இருப்பிட சான்றிதழில் சந்தேகம்..? 4 பேரின் மருத்துவ கலந்தாய்வு ரத்து.!

இருப்பிட சான்றிதழில் சந்தேகம்..? 4 பேரின் மருத்துவ கலந்தாய்வு ரத்து.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2020 9:41 AM GMT

இருப்பிடச் சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 18ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில் முதல் மூன்று நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடந்தது.


அதன்பின் கடந்த 21ம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என பலரும் கலந்து கொண்டனர். அதன்பின்னர் நிவர் புயல் காரணமாக கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. அதில் 4 மாணவர்களின் இருப்பிட சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி ரத்து செய்யப்பட்டது.


இந்த 4 பேரின் இருப்பிட சான்றிதழ்களை சிறப்பு குழுவினர் ஆராய்ந்து இவர்களின் அனுமதி ரத்து செய்தனர். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் போலி இருப்பிட சான்றிதழ்களை சமர்பித்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News