Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் 5 நாட்களுக்கும் வறண்ட வானிலையே நிலவும்.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தில் 5 நாட்களுக்கும் வறண்ட வானிலையே நிலவும்.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!
By : Kathir Webdesk
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது பற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும்.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் காரணமாக இன்றும், நாளையும் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
Next Story