Kathir News
Begin typing your search above and press return to search.

திருவண்ணாமலை கோயிலில் மஹா தீபத்தை வழிப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் !

திருவண்ணாமலை மஹா தீபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை கோயிலில் மஹா தீபத்தை வழிப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் !

ThangaveluBy : Thangavelu

  |  22 Nov 2021 4:57 AM GMT

திருவண்ணாமலை மஹா தீபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை மஹா தீபம் கார்த்திகை 1ம் தேதி ஏற்றப்பட்டது. இதனை பல லட்சம் பக்தர்கள் வீடுகளில் இருந்தபடியும், பல ஆயிரம் பேர் மலை அடிவாரத்தில் சென்று தரிசனம் செய்தனர். இந்த தீபமானது தொடர்ந்து 11 நாட்கள் எரியும். இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா மஹா தீபத்தை தரிசிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 21) திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த துர்கா ஸ்டாலின் அருணாசலேஸ்வரர் கோயிலில் விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிப்பட்டார். இதன் பின்னர் மஹா தீபத்தையும் வழிப்பட்டு தனது பிரார்த்தனையை நிறைவேற்றியுள்ளார். துர்கா ஸ்டாலினை கோயில் குருக்கள் சிறப்பு அர்ச்சனைகள் செய்தும் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டவராக இருக்கிறார். ஆனால் துர்கா அதற்கு மாறாக இந்து மதக்கடவுளை வழிப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News