Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் நில நடுக்கம் ! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நில நடுக்கம் ! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  24 Aug 2021 10:02 AM GMT

சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து வடகிழக்கு பகுதியில் 320 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் 10 கி.மீ ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நில அதிவு கண்காணிப்பு மையம் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கம் பகல் 12.35 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில நடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், கே.கே.நகர், அம்பத்தூர், அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் ஒன்றாக கூறியுள்ளனர். சென்னை நகரம் முழுவதும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். எங்கே சுனாமி வந்துவிடுமோ என கடலோர மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

Source, Image Courtesy: Top News

https://www.toptamilnews.com/earthquake-in-chennai-shock-to-the-people/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News