Kathir News
Begin typing your search above and press return to search.

கனமழை எதிரொலி.. கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லும் சாலை சேறும் சகதியுமாக மாறிய அவலம்.!

கனமழை எதிரொலி.. கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லும் சாலை சேறும் சகதியுமாக மாறிய அவலம்.!

கனமழை எதிரொலி.. கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லும் சாலை சேறும் சகதியுமாக மாறிய அவலம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Jan 2021 2:00 PM GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகம் விவசாய நிலப்பகுதியின் நடுவில் அமைந்துள்ள காரணத்தினால் ஒரு நாள் பெய்த கனமழையால் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு செல்லும் சாலைகள் மண் சாலையாக அமைந்துள்ளதால் நேற்று முன் தினம் ஒரு நாள் பெய்த மழைக்கு சாலைகள் படு மோசமான நிலையில் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.

மேலும் பெருவங்கூர் கிராம ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் அருகே உள்ள ஆற்றுப்பகுதிக்கு தண்ணீர் செல்கிறது. அப்படி செல்லும் தண்ணீர் ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியாக சாலையில் நிரம்பி செல்கிறது.

இப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலையை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News