Kathir News
Begin typing your search above and press return to search.

நிவர் புயல் எதிரொலி.. சி.ஏ., தேர்வுகள் அதிரடியாக ரத்து.!

நிவர் புயல் எதிரொலி.. சி.ஏ., தேர்வுகள் அதிரடியாக ரத்து.!

நிவர் புயல் எதிரொலி.. சி.ஏ., தேர்வுகள் அதிரடியாக ரத்து.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Nov 2020 12:59 PM GMT

தமிழகத்தை தாக்க வரும் நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் நடைபெறுவதாக இருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிமீ தொலைவில் உள்ள நிவர் புயல் 4 கிமீ வேகத்திலிருந்து 5 கிமீ அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.


இந்த புயலானது நாளை மகாபலிபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதன் காணராக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் நடைபெறவிருந்த சி.ஏ., தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறும் என என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் பேருந்து சேவை மற்றும் ரயில் சேவை போன்றவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News