Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்.!

தமிழகத்தில் பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்.!

தமிழகத்தில் பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2020 1:48 PM GMT

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தனது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. அதே போன்று தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளை செய்ய ஆயத்தமாகி வருகிறது.

முன்னதாக வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் கடந்த 2 மாத காலமாக வார இறுதி நாட்களில் நடைபெற்றது. இதற்கான இறுதி பட்டியல் வரும் ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படும்.

இந்நிலையில், தேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் நியமிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆறு மாத காலத்திற்குள் ஓய்வுபெறுபவர்களை தேர்தல் பணியில் நியமனம் செய்யக்கூடாது இந்திய தேர்தல் ஆணையம் கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி, அசாம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News