Begin typing your search above and press return to search.
மின்சார ரயில்கள் இன்று பகுதியாக ரத்து! காரணம் இது தானாம்!
மின்சார ரயில்கள் இன்று பகுதியாக ரத்து! காரணம் இது தானாம்!
By : Kathir Webdesk
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் (29ம் தேதி) இன்று கீழ்கண்ட பகுதிகளில் மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.08, 10.56, 11.48 மணி, மதியர் 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம் செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில்: செங்கல்பட்டு -கடற்கரை இடையே காலை 10.55, 11.30 மணி, மதியம் 12.20, 1.00, 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு -தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story