Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை: ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு உட்பட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை: ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு உட்பட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ThangaveluBy : Thangavelu

  |  28 Sep 2021 9:20 AM GMT

சென்னையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இயங்கி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான எழும்பூர், என்எஸ்சி போஸ், வேப்பேரி உள்ளிட்ட 10 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த தனியார் நிறுவனம் பொதுமக்களுக்கு வடிக்கு பணம் கொடுத்து அதனை திருப்பித் தராதவர்களின் நிலங்களை அபகரித்துள்ளதாகவும், சட்ட விரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறையிடம் புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து மத்திய ரிசர்வ் படை மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பின்னரே முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Source, Image Courtesy: TopNews Tamil


Next Story
கதிர் தொகுப்பு
Trending News