Begin typing your search above and press return to search.
மீண்டும் தொடங்கப்படும் கீழடியில் அகழாய்வுப் பணி! தொல்லியல் துறை ஒப்புதல்!
மீண்டும் தொடங்கப்படும் கீழடியில் அகழாய்வுப் பணி! தொல்லியல் துறை ஒப்புதல்!
By : Kathir Webdesk
தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் விதமாக கீழடியில் மேற்கொண்ட அகழாய்வில் பல உண்மைகள் தெரியவந்தது. இதனால் உலகிற்கே தமிழர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6 கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வில் சுமார் 2600 ஆண்டுகள் பழமையான தொல்லியல் பொருட்கள் கிடைக்கப்பெற்றது. இந்நிலையில், கீழடியில் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து 7ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இது பற்றி தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் கூறியுள்ள தகவல்படி, கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும். மேலும், தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய தொல்லியல் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
Next Story