Kathir News
Begin typing your search above and press return to search.

8 வழிச்சாலையை பெயர் மாற்றினால் எங்களுக்கு தெரியாதா: தி.மு.க.வுக்கு எதிராக களத்தில் இறங்கும் விவசாயிகள்!

8 வழிச்சாலையை பெயர் மாற்றினால் எங்களுக்கு தெரியாதா: தி.மு.க.வுக்கு எதிராக களத்தில் இறங்கும் விவசாயிகள்!

ThangaveluBy : Thangavelu

  |  26 April 2022 2:34 PM GMT

தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக சேலத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் நலன் கருதி பல்வேறு வகையிலான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்ட சேலம், சென்னை இடையிலான 8 வழிச்சாலையை தற்போது விரைவுச் சாலை என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர். இதற்கு எங்களின் விவசாயிகள் சார்பாக கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர். இந்த சாலை திட்டத்திற்கு கூட்டு இயக்கத்தின் தலைவர் காவிரி தனபாலன் தலைமையிலான விவசாயிகள் கண்டனத்தை தெரிவித்தனர்.

மேலும், திமுக அரசு இந்த சாலைத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். அப்படி கைவிடவில்லை எனில் விவசாயிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்றனர். மேலும், அதிமுகவால் கொண்டு வரப்பட்டு தடை செய்யப்பட்ட சாலைத்திட்டத்தை தற்போது திமுக மாற்று வழியில் நிறைவேற்ற துடிப்பது விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்கு சமம் எனவும் விவசாயிகள் கொந்தளித்தனர். எனவே திமுக அரசு நிறைவேற்ற இருக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த விவசாயிகள் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: ABP

Next Story
கதிர் தொகுப்பு
Trending News