Kathir News
Begin typing your search above and press return to search.

நாடார் சமூகம் குறித்து இழிவாக பேசிய பெண் மதபோதகர் அதிரடி கைது!

நாடார் சமூகம் குறித்து இழிவாக பேசிய குற்றத்திற்காக பெண் மதபோதகரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நாடார் சமூகம் குறித்து இழிவாக பேசிய பெண் மதபோதகர் அதிரடி கைது!

ThangaveluBy : Thangavelu

  |  30 Nov 2021 7:55 AM GMT

நாடார் சமூகம் குறித்து இழிவாக பேசிய குற்றத்திற்காக பெண் மதபோதகரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை அடுத்துள்ள குன்றத்தூரில் சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சில் ஒரு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மதபோதகர் பியூலா செல்வராணி என்படர் நாடார் சமூகம் பற்றி மிகவும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்து கூறியிருந்தார்.

அவரது பேச்சுக்கு நாடார் சமூகத்தினர் கடும் கண்டனங்களை தெரிவித்தது மட்டுமின்றி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதனிடையே நாடார் சமூதாயத்தை சேர்ந்வர்கள் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், சோமங்கலத்தில் பதுங்கியிருந்த பெண் மதபோதகர் பியூலா செல்வாராணியை போலீசார் அதிரடியாக கைது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News