Kathir News
Begin typing your search above and press return to search.

தலைமை செயலகத்தில் பாதுகாப்புக்கு இருந்த பெண் போலீஸ் மரணம் !

சென்னை தலைமை அலுவலகத்தில் அரசு அலுவலக பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்கு சென்று வருவது வழக்கம். இதன் பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

தலைமை செயலகத்தில் பாதுகாப்புக்கு இருந்த பெண் போலீஸ் மரணம் !

ThangaveluBy : Thangavelu

  |  2 Nov 2021 5:46 AM GMT

சென்னை தலைமை அலுவலகத்தில் அரசு அலுவலக பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்கு சென்று வருவது வழக்கம். இதன் பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அமைந்துள்ள பகுதியில் திடீரென்று ஒரு மரம் சாய்ந்து கீழே விழுந்துள்ளது. கனமழையால் மரம் சாய்ந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.


அப்போது பாதுகாப்புக்காக இருந்த பெண் போலீஸ் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், போக்குவரத்து காவலரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேமடைந்துள்ளது. தலைமை செயலகத்தில் பாதுகாப்புக்காக இருந்த பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy: Dinasuvadu


Next Story
கதிர் தொகுப்பு
Trending News