Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் தி.மு.க'வின் பேச்சாளர் லியோனின் திமிர் பேச்சு - இந்துக்களின் யாகத்தை கொச்சைப்படுத்தினர்

இந்து யாகம் வளர்ப்பதை கொச்சைப்படுத்திய லியோனியின் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தி.மு.கவின் பேச்சாளர் லியோனின் திமிர் பேச்சு - இந்துக்களின் யாகத்தை கொச்சைப்படுத்தினர்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Aug 2022 6:20 AM GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், 60வது பிறந்தநாளில் அவரைப் பற்றி வாழ்த்தி கூறியதற்காக பேசிய ஐ லியோனி அவர்கள் இந்து மக்கள் செய்யும் யாகம் வளர்ப்பது பற்றி மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். மேலும் இப்படி பேசிய ஐ லியோனி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தற்போது பாரத் இந்து முன்னணி மாநில செயலர் டில்லிபாபு என்பவர் புகார் ஒன்றையும் சென்னை காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.


இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு அமைந்து இருப்பதன் காரணமாக தற்போது அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அவர் பேசுகையில் பல்வேறு இடங்களில் நான் யாகங்களுக்கு சென்றுள்ளேன். பல்வேறு இடங்களில் இத்தகைய யாகங்கள் நடைபெறுகையில் பல்வேறு மந்திரங்கள் ஓத படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பாக ஐயர்கள் மந்திரம் போது கையில் சுக்லாம் பரதம் விஷ்ணு சசிவர்ணம், என்று அரை மூட்டை விறகை போட்டு நம்மைத் துன்புறுத்தும் அளவிற்கு அங்கிருந்து புகை கிளம்பும் என்று கூறியுள்ளார்.


பொதுவாக யாகம் வளர்ப்பது என்றால் விறகுகள் வைத்துதான் யாகம் வளர்க்கிறார்கள் இதன் மூலம் நெருப்பு வரத்தான் செய்கிறது. ஆனால் யாகம் வளர்ப்பது இந்துக்களின் மந்திரத்தை சொல்லி இப்படி சொன்னது பல்வேறு எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது இதன் காரணமாக இந்து மக்கள் தங்களுடைய மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பயிர் செய்வதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News