Begin typing your search above and press return to search.
பரபரப்பு: தலைமை செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தீ விபத்து.!
சென்னை, தலைமை செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
சென்னை, தலைமை செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள ஜார்ஜ் கோட்டையின் பின்புறம் வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனை அங்கிருந்த ஊழியர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலை தொடர்ந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் கார் முன்பக்கம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story