பிக்பாக்கெட் அடித்த தி.மு.க முன்னாள் கவுன்சிலர்க்கு பொதுமக்கள் தர்மஅடி குடுத்து போலீசில் ஒப்படைப்பு.!
பிக்பாக்கெட் அடித்த தி.மு.க முன்னாள் கவுன்சிலர்க்கு பொதுமக்கள் தர்மஅடி குடுத்து போலீசில் ஒப்படைப்பு.!

By : Mohan Raj
தமிழகத்தில் பத்து ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்த வறட்சியில் தி.மு.க'வினர் பிக்பாக்கெட் அடிக்கும் அளவிற்கு இறங்கி வந்துவிட்டனர். அந்த வகையில் வேலூர் மாநகரில் பிக்பாக்கெட் அடித்த தி.மு.க முன்னாள் பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்தவர் தாகீரா பேகம் மற்றும் அவரது மகன் அத்தர் ஆகிய இருவரும் நேற்று காலை 11 மணிக்கு சாரதி மாளிகையில் பொருள்கள் வாங்க சென்றுள்ளனர். அப்பெழுது தாகீரா பேகத்தின் கைப்பையை ஒரு பெண் திடீரென பறித்துக்கொண்டு ஓடினார்.
உடனே தாகீரா பேகம் கூச்சலிட அக்கம் பக்த்திலுள்ளவர்கள் அந்த பிக்பாக்கெட் அடித்தை பெண்ணை கையும், களவுமாக பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்ததில் அவர் ஆம்பூர் அடுத்த நரியம்பேட்டை முன்னாள் தி.மு.க கவுன்சிலர் பாரதி என்றும். அவர் தி.மு.க கவுன்சிலராக பதவியில் இருக்கும் போது இரண்டு முறை பிக்பாக்கெட் அடித்தை கைது செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
போலீசார் தி.மு.க முன்னாள் கவுன்சிலர் பாரதியை கைது செய்து வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். காரணம் பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை எனவே ஊழல் செய்து சம்பாதிக்க வழியில்லை ஆதலால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் உலகில் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
