Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில் நிலங்களை மீட்க வட்டாட்சியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: அதிகாரிகளிடம் கெஞ்சும் அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டு கோயில்களின் வருவாயை மேலும் அதிகரிக்க வட்டாட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோயில் நிலங்களை மீட்க வட்டாட்சியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: அதிகாரிகளிடம் கெஞ்சும் அமைச்சர் சேகர்பாபு!

ThangaveluBy : Thangavelu

  |  30 Dec 2021 8:09 AM GMT

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டு கோயில்களின் வருவாயை மேலும் அதிகரிக்க வட்டாட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயிலுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து அதனை ஆக்கிரமித்திருந்தால் அதனை உடனடியாக மீட்டு, மீண்டும் கோயிலுக்கு தேவையான வருமானங்களை அதிகரிப்பதற்கு வட்டாட்சியர்கள் உதவ வேண்டும்.

கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தற்போது ஆக்கிரமித்து வைத்துள்ளவர்களிடம் இருந்து மீட்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 456 பேர்களிடம் இருந்து கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றார். மேலும், மீட்கப்படாத கோயில் சொத்துகளையும் உடனடியாக மீட்பதற்கு வட்டாட்சியர்கள் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: News 7 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News