Kathir News
Begin typing your search above and press return to search.

ஏற்கனவே தேச விரோத செயலிலும் ஈடுபட்ட பாதிரியார் : திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திடீர் திருப்பம்..!

he pastor and his friends then filmed the act, confined her inside a farmhouse and repeatedly raped her.

ஏற்கனவே தேச விரோத செயலிலும் ஈடுபட்ட பாதிரியார் : திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திடீர் திருப்பம்..!

TN pastor booked for gang-raping a woman and recording the act/ Image Source: Arunamaiorg

MuruganandhamBy : Muruganandham

  |  14 Aug 2021 6:21 AM GMT

திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவை பதிவு செய்ததாக, அருமனை கிறிஸ்தவ சங்க பாதிரியார் அருமை ஸ்டீபன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிரியாரோடு சேர்ந்து மேலும் ஏழு பேர் குற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்துக்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பும் வகையில் பேசிய பொழுது, அவரோடு சேர்ந்து இந்து தெய்வங்களை துஷ்பிரயோகம் செய்ததற்காக பாஸ்டர் ஸ்டீபன் ஏற்கனவே கைது செய்யப்பட்டவராவார்.

பாஸ்டர் பொன்னையா பாரத மாதாவை அவமதித்து பேசிய நிகழ்ச்சியை அருமை ஸ்டீபன் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, பூமி தாயின் மரியாதைக்காக காந்தியை காலணி அணியவில்லை என்று கேலி செய்தார். ஆனால் நாங்கள் காலணிகளை அணிவோம். ஏன்? ஏனென்றால் பாரத மாதாவின் அசுத்தங்கள் நம்மை மாசுபடுத்தக்கூடாது. தமிழக அரசு எங்களுக்கு இலவச காலணி வழங்கியுள்ளது. இந்த பூமாதேவி அபாயகரமானவர். அதனால் உங்களுக்கு சிரங்கு பிடிக்கலாம் பேசினார். மேலும் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பற்றி கேவலமான கருத்துக்களை கூறினார்.

தேசத்திற்கு எதிராக வெறுப்பை பரப்பியதற்காக சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ பாதிரியாரை கைது செய்யுமாறு தொடர்ச்சியாக வந்த புகாரைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை ஜார்ஜ் பொன்னையா மற்றும் அருமனை ஸ்டீபனை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News