70 லட்சம் கேட்டு ஓட்டல் அதிபரை கடத்திய கந்துவட்டி கும்பல் - சேலத்தில் அதிகரிக்கும் அட்டூழியம்
சேலத்தில் 70 லட்ச ரூபாய் பணம் கேட்டு ஓட்டல் அதிபரை கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
By : Mohan Raj
சேலத்தில் 70 லட்ச ரூபாய் பணம் கேட்டு ஓட்டல் அதிபரை கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூரமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சரண்யா என்பவரிடம் வாங்கிய 24 லட்சம் ரூபாய் கடனுக்காக அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து 96 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுத்து விட்டதாக தெரிகிறது, இந்நிலையில் மேலும் 70 லட்ச ரூபாய் பணம் கேட்டு சுப்பிரமணியனை சரண்யா மிரட்டி உள்ளார்.
அவர் பணம் தர மறுக்கவே எட்டு பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து சுப்பிரமணியனை காரில் கடத்திச் சென்றது, அவர் மனைவி அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மொபைல் சிக்னல் மூலம் சுப்ரமணியன் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவரை மீட்டனர். இந்த கடத்தல் ஈடுபட்ட 8 பேரில் இரண்டு பேரை கைது செய்த போலீசார் மேலும் ஆறு பேரை தேடி வருகின்றனர். கந்துவட்டி கும்பல் தொழிலதிபரை கடத்திய விவகாரம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.