Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. அரசின் சட்டம், ஒழுங்கு எங்கே? வேலூரில் கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

தி.மு.க. அரசின் சட்டம், ஒழுங்கு எங்கே? வேலூரில் கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

ThangaveluBy : Thangavelu

  |  23 March 2022 6:51 AM GMT

வேலூரில் இளம்பெண் ஒருவர் கத்தி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் கடந்த 16ம் தேதி இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது நள்ளிரவு ஒரு மணிக்கு ஆட்டோவுக்காக காத்திருந்தனர். அந்த சமயத்தில் ஒரு ஆட்டோவில் ஓட்டுநருடன் சேர்த்து 5 பேர் இருந்தனர். இதனால் ஷேர் ஆட்டோதான் என்று ஆண் நண்பருடன் இளம்பெண் ஏறியுள்ளனர்.

புதிய பேருந்து நிலையத்தை கடந்து சென்றபோது ஆட்டோவில் இருந்த சிலர் திடீரென்று கத்தியை காட்டி இருவரையும் ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் இருக்கும் பாலாற்றுக்கு கடத்திச் சென்று அங்கு அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அது மட்டுமின்றி பெண்ணிடம் இருந்த 2 பவுன் நகை மற்றும் பணத்தையும் பறித்து சென்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் வேலூர் எஸ்.பி. அலுவலகத்துக்கு இமெயில் வாயிலாக புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 5 பேரில் 4 பேரை கைது செய்துள்ளனர். அதில் இரண்டு பேர் சிறுவர்கள் என தெரியவந்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பட்டப்பகலில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் பகல் நேரங்களிலேயே வெளியில் செல்வதற்கு அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் விருதுநகரில் இளம்பெண் ஒருவர் திமுக பிரமுகரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News