Kathir News
Begin typing your search above and press return to search.

செய்யாறில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா.. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு.!

செய்யாறில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா.. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு.!

செய்யாறில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா.. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Feb 2021 10:10 AM GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் பட்டதாரி பெண்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்க நாணயம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் செய்யாறில் நடைபெற்றது. இந்த விழாவில் ரூ.7 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பில் தாலிக்கு 8 கிராம் தங்க நாணயத்தை 791 பயனாளிகளுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

மேலும், மற்றொரு நிகழ்ச்சியில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் 897 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவி, விபத்து நிவாரணம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி மற்றும் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 214 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் கந்தன், செய்யாறு வட்டாட்சியர் திருமலை, சமூகபாதுகாப்பு வட்டாட்சியர் சுபாஷ் சந்தர், வெம்பாக்கம் வட்டாட்சியர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News