மது போதையில் நடு ரோட்டில் தள்ளாடியபடியே நடந்து வந்த அரசு பள்ளி மாணவி - வெளியான பகீர் வீடியோ!
தர்மபுரி மாவட்டம் இண்டூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர் மது போதையில் தள்ளாடியபடியே நடந்து வந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.
By : Mohan Raj
தர்மபுரி மாவட்டம் இண்டூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர் மது போதையில் தள்ளாடியபடியே நடந்து வந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.
சமீபகாலமாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆசிரியரை அடிக்கப் போவதும், மேஜை மற்றும் நாற்காலிகளை உடைப்பதும், மாணவர்கள் மாணவிகள் மடியில் படுத்து ஜாலியாக பொழுதை கழிப்பது போன்ற முகம் சுளிக்கும் ஒழுங்கீன செயல்கள் வீடியோக்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன. இதுகுறித்து அரசு பள்ளிகளின் தரம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சேவையில் கேள்விக்குறி எழுந்துள்ள நிலையில் தற்பொழுது பெற்றோர்களின் வயிற்றில் நெருப்பை பற்ற வைக்கும் ஒரு விஷயமாக அரசு பள்ளி மாணவி ஒருவர் மது போதையில் தள்ளாடியபடியே சாலையில் நடந்துவரும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவுவதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர் மது அருந்திவிட்டு தள்ளாடியபடியே வந்துள்ளார், இதனை கண்ட பொது மக்களில் ஒரு சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இது சம்பவம் குறித்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து தற்போது அதிக அளவில் பரவி வருகின்றது.
இந்நிலையில் சாலையின் மறுபுறத்தில் இருந்ததாக கூறப்படும் 4 மாணவிகளில் ஒரு மாணவி மட்டும் சாலையை கடக்க முயற்சித்தபோது சாலையின் நடுவில் இருந்த கம்பத்தில் நிற்க முடியாமல் தள்ளாடிய நிலையில் கைத்தாங்கலாக சாய்ந்து நின்று கொண்டார். மேலும் சாலையை கடக்கும் பொழுது மற்ற மூன்று மாணவிகள் சாலையின் மறுபுறத்தில் நின்று விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் இண்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடை இல்லை என்பதும் வேறு பகுதிக்கு சென்று மது பாட்டில்களை மாணவி வாங்கியுள்ளார் என்பதும் சந்தேகம் எழுந்துள்ளது.
பள்ளி செல்லும் வயதில் வகுப்பை புறக்கணித்து விட்டு இப்படி மதுபோதையில் மாணவிகள் ரோட்டில் நடந்து வருவது போன்ற செயல்கள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மட்டுமல்லாமல் பெண் பிள்ளைகளைப் பெற்றோர் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.