Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளி சீருடையில் வளாகத்தை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவர்கள்: சென்னையில் அவலம்!

சென்னையில் சிறந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்தை பள்ளி சீருடை அணிந்து சுத்தம் செய்யும் நிலைமை.

பள்ளி சீருடையில் வளாகத்தை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவர்கள்: சென்னையில் அவலம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Feb 2023 3:26 AM GMT

அரசு பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அரசு பள்ளிகளில் ஒரு சில குறைபாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால் அடிப்படை வசதிகளை இல்லாவிட்டாலும் துப்புரவு பணிகளை செய்ய ஆட்கள் இருந்து வரும் நிலையில் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தற்பொழுது பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் ஒரு சூழ்நிலை உருவாக்கி இருக்கிறது.


குறிப்பாக காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தை வகுப்பறை சுத்தம், வளாக சுத்தம் செய்து வீணாக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை முல்லைவாயில் அடுத்த சோழம்பேடு பகுதிகளில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.


இந்த பள்ளியில் மாணவ மாணவிகள் வகுப்பறையை மட்டுமல்லாது பள்ளிகளாக அதையும் சுத்தம் செய்யும் காட்சி தற்பொழுது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதில் பள்ளி சீருடை அணிந்துள்ள மாணவ மாணவியர் வகுப்பறைகளில் சுத்தம் செய்து வருவதும் சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாகி இருக்கிறது. பள்ளி நேரங்களில் பள்ளி வகுப்பு நடைபெறாமல் இருப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்து இருக்கிறது.

Input & Image courtesy: Puthiyathalaimurai News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News