சிதிலமடைந்த மூதாட்டியின் கூரை வீட்டை சரிசெய்து கொடுத்த பேஸ்புக் நண்பர்கள்!
![சிதிலமடைந்த மூதாட்டியின் கூரை வீட்டை சரிசெய்து கொடுத்த பேஸ்புக் நண்பர்கள்! சிதிலமடைந்த மூதாட்டியின் கூரை வீட்டை சரிசெய்து கொடுத்த பேஸ்புக் நண்பர்கள்!](https://kathir.news/h-upload/2022/01/19/1314057-house.webp)
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே ஆதரவின்றி மிகவும் சிதிலமடைந்த நிலையில் வசித்து வந்த மூதாட்டியின் கூரை வீட்டை பேஸ்புக் நண்பர்கள் உதவியுடன் ஒருவர் சரிசெய்து கொடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ளது மேட்டுசசேரி. இங்கு மெர்சி என்ற மூதாட்டி மட்டும் தனிமையில் வசித்து வந்துள்ளார். அவரது குடிசை வீடு மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது.
இது பற்றி கேள்விப்பட்ட தரங்கம்பாடி பொதுத்தொழிலாளர் சங்க பொருப்பாளரான அருண்குமார் மூதாட்டிக்கு உதவி செய்வதற்கு தனது பேஸ்புக் நண்பர்கள் மூலம் அணுகியுள்ளார். அதன் மூலம் ரூ.40 ஆயிரம் நிதியுதவி கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் மூதாட்டியின் கூரையை சரிசெய்து அவருக்கு தேவையான மளிகைப்பொருட்களையும் வழங்கியுள்ளார். இது பற்றிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai