Kathir News
Begin typing your search above and press return to search.

25 வருசமா ரூ.1000 கோடி மோசடி செய்ததா சன்டிவி? தயாரிப்பாளரிடம் சிக்கிய ஒப்பந்த ஆவணம்.!

25 வருசமா ரூ.1000 கோடி மோசடி செய்ததா சன்டிவி? தயாரிப்பாளரிடம் சிக்கிய ஒப்பந்த ஆவணம்.!

25 வருசமா ரூ.1000 கோடி மோசடி செய்ததா சன்டிவி? தயாரிப்பாளரிடம் சிக்கிய ஒப்பந்த ஆவணம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Nov 2020 6:39 PM GMT

சன் டிவியுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி சன் டிவி, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் தர வேண்டியிருக்கிறது.

இத்தனை வருடங்களாக காணாமல் போய்விட்டதாக கதை விடப்பட்டு வந்த அந்த ஒப்பந்தத்தை போராடி மீட்டுள்ளதாக தயாரிப்பாளர் எஸ்.கே.சதீஷ்குமார் கூறியுள்ளார். அது பற்றிய ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், அந்த ஒப்பந்த பத்திரத்தின் நகலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது தமிழ் சினிமாத்துறையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவர் இது பற்றி என்ன சொல்கிறார் வாங்க பார்க்கலாம். இது உண்மையா அல்லது புரளியா என்பது ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களுக்குத்தான் தெரியும்.

அந்த ஆடியோவில் ஜெ.எஸ்.கே. சதீஷ்குமார் கூறியுள்ளதாவது:

நமது சங்கத்துல பல வருடமா இருக்குற பிரச்சனை இது தனியார் தொலைக்காட்சிக்கிட்ட நம் சங்கம் போட்டிருந்த ஒரு ஒப்பந்தம் காணாமல் போய்விட்டது. அது திருடப்பட்டு விட்டதாக இத்தன நாளாக சொல்லப்பட்டு வந்தது. அந்த ஒப்பந்தம் கிடைக்காததால் நம் சங்கத்திற்கு பலகோடி வருமான வரவேண்டி உள்ளது. இது சம்பந்தமா பல முறை விவாதம் நடந்திருக்குது. முதலில் அப்படி ஒரு ஒப்பந்தம் இருக்குதா இல்லையா? என்ன நடந்தது? என்பது பற்றி பல நிர்வாகிகளுக்குத்தான் தெரியும்.

அந்த அக்ரிமண்ட் நடந்தது உண்மைதான். அதுவும் இருக்குது. 1995ல் கே.ஆர்.ஜி. தலைவராக இருந்தபோது தனியார் தொலைக்காட்சிகிட்ட அந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதாவது ஒரு வாரத்திற்கு 6 பாடல்கள் ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சி நம் சங்கத்திற்கு ஒரு லட்சம் கொடுக்க வேண்டும். அதே பாடல்கள் மீண்டும் இரண்டாம் முறை ரிப்பீட் செய்யும்போது ஒரு பாட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய். அதற்கு அடுத்து எத்தனை முறை ஒளிபரப்பு ஆனாலும் அதற்கு 2 ஆயிரம். மேலும், எங்க தொலைக்காட்சியை தவிர வேறு எந்த தொலைக்காட்சிக்கும் நீங்க பாடல்களை கொடுக்கக் கூடாது. வேண்டுமானால் தூர்தர்ஷனுக்கு கொடுங்கள் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தமானது ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப் படவேண்டும் என்பது விதி ஆகும். ஆனா, அதன் பிறகு அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவே இல்லை. அப்படி செய்யாத பட்சத்தில் தொலைக்காட்சி பாடல்களை பயன்படுத்தி இருக்கக்கூடாது. ஆனா, 25 வருடங்களாக தொலைக்காட்சி அனைத்து படத்தின் பாடல்களையும் ஒளிபரப்பு செய்து வந்துள்ளது. அதனால 25 வருடத்துக்கும் பல கோடி ரூபாய் அளவிற்கு தொகை வரவேண்டியுள்ளது.

கே.ஆர்.ஜி.க்கு பிறகு பல நிர்வாகங்கள் வந்தும், அந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சே அப்போதெல்லாம் எழவில்லை. நம் சங்கத்திற்கு பல கோடிகள் வரவேண்டியது இருக்கும்போது, நட்சத்திர நிகழ்ச்சிகள், நட்சத்திர கிரிக்கெட் என்று நாம் கையேந்திக்கிட்டு கிடக்கிறோம்.

இத்தனை வருடங்களாக இவ்வளவு கோடி வரவேண்டியிருக்கு என்று சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகத்திடம் பழைய நிர்வாகிகள் போய் பேசியிருந்தால், அந்த நிர்வாகம் பணம் கொடுத்திருக்கும். சங்கத்திற்கு ஒரு வழி பிறந்திருக்கும். 2 ஆயிரம் கோடி இல்லனாலும் ஒரு ஆயிரம் கோடி.. அது இல்லனா குறைந்த பட்சம் 100 கோடியாவது வந்திருக்குமே. இது அனைத்து தயாரிப்பாளர்களோட வாழ்வாதரம் பிரச்சனை இல்லையா.

இதனை மூத்த நிர்வாகிகள் செய்யாமல் இருப்பதற்கு காரணம் ஒரு வகையில் சுயலாபம்தான். இப்ப அந்த ஒரிஜினில் அக்ரிமெண்டை, நம்ம திரைத்துறையின் முக்கிய புள்ளிகிட்ட இருந்து போராடி மீட்டு வந்துள்ளேன். 1300 தயாரிப்பாளர்களும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து போய் அந்த சேனல்கிட்ட பேசி பார்த்தால் நமக்கான உரிமை உடனே செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

அப்படி பணம் கிடைச்சா 12 ஆயிரம் ஓய்வூதியத்தை 20 ஆயிரமாக மாற்றலாம். மேலும், அனைவருக்கும் வீடு கிடைக்கும். 25 வருடங்களின் பணத்தை கணக்கு போட்டு பாருங்க எவ்வளவு தொகை கிடைக்கும் என கூறியுள்ளார். இதனால் அந்த சேனல் மீது நாம் குற்றச்சாட்டு வைக்க முடியாது. நாம்தான் தவறவிட்டோம்.

அவர்களை குறை சொல்ல முடியாது. அந்த சேனலிடம் முறையாக சொல்லி நம் பணத்தினை மீட்டெடுக்கும் வழியை பார்ப்போம் என்று சொல்லி இருக்கிறார்.
ஒரு வேளை இது உண்மையாக இருந்தால் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் மீட்கப்படலாம். இது போன்ற ஒப்பந்தத்தை அவ்வளவு பெரிய நிர்வாகம் ஏன் புதுப்பிக்காமல் இருந்து வந்துள்ளது என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News