Kathir News
Begin typing your search above and press return to search.

2 ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கைது!

2 ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  24 April 2022 12:24 PM GMT

மதுரையில் அரசுப் பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமை ஆசிரியர் ஜோசப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை, கீரைத்துறையை சேர்ந்தவர் ஜோசப் ஜெயசீலன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் பள்ளிக்கு சமீபத்தில் மாறுதல் பெற்று வந்த 2 பெண் ஆசிரியைகளுக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக ஜோசப் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பொறுத்து போன ஆசிரியைகள் இது போன்று செய்வது தவறு என்று கண்டித்துள்ளனர்.

ஆனால் ஜோசப் ஜெயசீலன் அதனை கண்டுக்கொள்ளாமல் தொலைபேசி வாயிலாகவும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். எல்லை மீறிப்போனதால் இரண்டு பெண் ஆசிரியைகளும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து ஜோசப் ஜெயசீலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசுப் பள்ளியில் இரண்டு பெண் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:India Tv

Next Story
கதிர் தொகுப்பு
Trending News