Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 29,30ம் தேதிகளில் கனமழை.. ரெட் அலார்ட் விடுத்த வானிலை மையம்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 29,30ம் தேதிகளில் கனமழை.. ரெட் அலார்ட் விடுத்த வானிலை மையம்!

ThangaveluBy : Thangavelu

  |  26 Aug 2021 11:44 AM GMT

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போன்று புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

மேலும், தமிழகத்தில் 29 மற்றும் 30ம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dailythanthi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/26125417/IMD-Predicts-Rain-in-8-Districts-of-Tamilnadu-on-Today.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News