Kathir News
Begin typing your search above and press return to search.

கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று (டிசம்பர் 1) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

ThangaveluBy : Thangavelu

  |  1 Dec 2021 3:15 AM GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று (டிசம்பர் 1) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக நகரில் பல வீடுகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. நேற்று காலை முதல் வெயில் லைட்டாக அடித்தது. அடிக்கடி மேக மூட்டம் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. இனால் வீடுகளில் இருந்து மழைநீரை வெளியேற்றும் பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கனமழை பெய்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 1) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பெய்யும் மழையால் மீண்டும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதால் மக்கள் அச்சத்துடனேயே வீடுகளில் முடங்கியுள்ளனர்.

Source: Daily Thanthi

Image Courtesy:The New Indian Express


Next Story
கதிர் தொகுப்பு
Trending News