Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2020 8:03 AM GMT

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கனமழை நீடித்து வருகிறது. இந்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 2 லட்சம் ஏக்கர் நெல்வயல்கள் நீரில் மூழ்கியுள்ளது. அதே போன்று சென்னை போன்ற மாநகர் பகுதிகளில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து காணப்படுகிறது. தொடர் மழையால் மக்கள் அவதிபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இதன் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.


மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News