Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டு நாட்களிலும் தமிழகத்தில் அதிகனமழை நீடிக்கும்.!

இரண்டு நாட்களிலும் தமிழகத்தில் அதிகனமழை நீடிக்கும்.!

இரண்டு நாட்களிலும் தமிழகத்தில் அதிகனமழை நீடிக்கும்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Dec 2020 3:36 PM GMT

வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது என்றும், தமிழகத்தில் பரவலாக இரண்டு நாட்களுக்கு அதிகனமழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், மன்னார்வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.


அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 36 செ.மீ., சிதம்பரத்தில் 34செ.மீ., மழையும் பெய்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இது இயல்பைவிட 2 சதவீதம் குறைவாக உள்ளது. நேற்றுவரை 16 சதவீதம் குறைவாக மழை இருந்த நிலையில் தற்போது 2 சதவீதம் குறைந்துள்ளது அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும்.


கனமழையை பொறுத்தவரையில் கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், வேலூர், சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News