Begin typing your search above and press return to search.
இந்த 8 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.. வானிலை மையம் தகவல்.!
இந்த 8 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.. வானிலை மையம் தகவல்.!
By : Kathir Webdesk
சென்னையில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றும் ஆங்காங்கே விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பல இடங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், புதுவை ஆகிய 8 மாவட்டஙகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களை பொறுத்தவரையில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
Next Story