Kathir News
Begin typing your search above and press return to search.

13 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

13 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

13 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Feb 2021 2:01 PM GMT

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 13 மாவடங்களில் கனமழை பெய்யும். அதில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தேனி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News