Kathir News
Begin typing your search above and press return to search.

நாமக்கல்லில் கொட்டித்தீர்த்த கனமழை! வீடு, கடைகளில் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி!

நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகள், கடைகளில் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

நாமக்கல்லில் கொட்டித்தீர்த்த கனமழை! வீடு, கடைகளில் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி!

ThangaveluBy : Thangavelu

  |  1 Oct 2021 10:51 AM GMT

நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகள், கடைகளில் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பள்ளிபாளையத்தில் தேங்கிய மழைநீரால் வடிகால்களில் அடைப்புகளில் மழைநீர் தேங்கியது. அது மட்டுமின்றி சாலைகள், கடைகளுக்கு மழைநீர் புகுந்தது.

மேலும், திருச்செங்கோடு பகுதியிலும் வீடுகளுக்கு மழைநீர் புகுந்தது. இதனால் வெள்ளத்தால் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: The New Indian Express


Next Story
கதிர் தொகுப்பு
Trending News