Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் கனிமங்களை எடுத்து குப்பைகளை கொட்டுவதா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க என்ன நடவடிக்கையை அரசு எடுத்து இருக்கிறது?

தமிழகத்தில் கனிமங்களை எடுத்து குப்பைகளை கொட்டுவதா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Jan 2023 8:42 AM GMT

கனிமங்களை எடுத்து சென்று விட்டு கழிவுகளை இங்கு கொட்டுவது ஏற்படுகிறது அல்ல. குறிப்பாக பிற மாநில மாநிலங்களில் இருந்து கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதை தவிர்க்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருக்கிறது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிதம்பரம் என்றவர் உயர்நீதிமன்றத்தில் 2019 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் ஈடுபட்டு கூறுகையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு லாரிகள் மூலம் ஜல்லி, கல் பொருட்களும் நமது மாநிலத்திற்கு கொண்டு வரப்படுகிறது.


இதனால் நோய் பரவும் அபாயம் அதிகமாக இருக்கிறது. பாதுகாப்பு பலகை, கண்காணிப்பு கேமரா பொருத்துதல் போன்ற பலவற்றை மேற்கொள்ளவும். தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை நீதிபதிகள் விசாரணைக்கு முன்னிலையில் வந்தது. நீதிபதிகள் இது குறித்து கேள்வி எழுப்பு கையில் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.


ஆனால் கழிவுகள் கொட்டுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என்று அதிகாரிகளை கேள்வி எழுப்பினார். நீதிபதி மேலும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News