Kathir News
Begin typing your search above and press return to search.

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... பாதிரியாருக்கு கிடைத்த சரியான தண்டனை...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு சாகும் வரை சிறை தண்டனை.

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... பாதிரியாருக்கு கிடைத்த சரியான தண்டனை...

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 April 2023 3:00 AM GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் தான் ஜோசப் ராஜ் என்பவர். இவர் அங்கு பிரார்த்தனைக்காக வந்திருந்த மனநலம் பாதித்த சிறுமியை தவறான வழியில் வழி நடத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த மே மூன்றாம் தேதி, 2022 அன்று 17 வயது உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை இவர் கொடுத்ததாகவும் இவர் பெயரில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.


இது குறித்து ராஜபாளையம் போலீஸ் அலுவலக பதிவு செய்து ஜோசப் ராஜை கைது செய்து விசாரித்து வந்தார்கள். மேலும் அவர் தவறு செய்து இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட பூச்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.


வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து இருந்தார். மேலும் பாதிரியாருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் என்று தீர்ப்பு விதித்தார். இந்த ஒரு தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட சிறுமிக்கு பத்து லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Mediyaan News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News