Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒட்டகங்கள் பலியிடுவதை தடுக்க வேண்டும்: தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒட்டகங்கள் பலியிடுவதை தடுக்க வேண்டும்: தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

ThangaveluBy : Thangavelu

  |  15 April 2022 2:26 AM GMT

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒட்டகங்களை சட்டவிரோதமாக தமிழகத்திற்கு கடத்தி வந்து பலியிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது பற்றி கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மக்கள் அமைப்பு சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு தற்போது தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, ராஜஸ்தானில் இருந்து ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு பலியிடப்பட்டு வருதாக மனுதாரர் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இதனை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து அரசு தரப்பில் கூறும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒட்டகங்கள் பலியிடப்படவில்லை என்றது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். மேலும், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு பலியிடுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Delicious

Next Story
கதிர் தொகுப்பு
Trending News