Kathir News
Begin typing your search above and press return to search.

ஹிந்து சான்றிதழ் வைத்து கிரிமினல் குற்றத்தில் ஈடுபடும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ் : ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காட்டம்..!

கிரிமினல் குற்றத்தில் ஈடுபடும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., போன்றவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்

ஹிந்து சான்றிதழ் வைத்து கிரிமினல் குற்றத்தில் ஈடுபடும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ் : ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காட்டம்..!

MuruganandhamBy : Muruganandham

  |  8 Oct 2021 7:03 AM GMT

உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் சொல்லும் விடயங்களை,மக்கள் எளிதாக ஏற்பார்கள். எனவே உமாசங்கர் போன்ற உயர் அதிகாரிகளின் தாக்கம் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி இருக்கையில், வெளிப்படையாக கிறிஸ்துவ பரப்புரை செய்து கொண்டு, ஹிந்து என சான்றிதழ் வைத்து கிரிமினல் குற்றத்தில் ஈடுபடும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., போன்றவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மஹாளய அமாவாசை தினத்தில், முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்கு ராமேஸ்வரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே கடற்கரையில் சினிமா படப்பிடிப்பு நடத்த மட்டும் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. இதனை கடுமையாக கண்டிக்கிறேன்.

சமீபத்தில் ருத்ர தாண்டவம் படம் வெளியானதற்கு பிறகு, கிரிப்டோ கிறிஸ்துவர்கள் குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஹிந்து தாழ்த்தப்பட்ட மக்களின் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும். உமாசங்கர் ஐ.ஏ.எஸ் வெளிப்படையாக கிறிஸ்துவ மதப் பிரசாரம் செய்து வருகிறார். அவர் ஹிந்து என சான்றிதழ் வைத்துள்ளார். இது ஒரு கிரிமினல் குற்றம். மிகப் பெரும் மோசடி. அரசு துறையிலும் ஹிந்து சான்று மூலம் ஊடுருவி உள்ள பிற மதத்தவர்களை நீக்க வேண்டும் என பேசியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News