Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளி மாணவர்களுக்கு பைபிளின் "புதிய ஏற்பாடு" புத்தகம் விநியோகம் ! சம்பவ இடத்துக்கு விரைந்த இந்து முன்னணி !

பள்ளி மாணவர்களுக்கு பைபிளின்  புதிய ஏற்பாடு புத்தகம் விநியோகம் ! சம்பவ இடத்துக்கு விரைந்த இந்து முன்னணி !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Dec 2021 12:14 PM GMT

திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு சிலர், கிறித்துவ புனித நூலான பைபிளின் "புதிய ஏற்பாடு" புத்தகத்தை விநியோகம் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில்,காவிலிபாளையம்புதூர் பகுதியில் ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அப்பகுதி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி மாணவர்களுக்கு மத மாற்றம் எண்ணம் உடைய ஒரு சிலர், கிறித்துவ புனித நூலான பைபிளின் "புதிய ஏற்பாடு" புத்தகத்தை விநியோகம் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச் செய்தி அறிந்த திருப்பூர் மாவட்ட இந்து முன்னணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்து முன்னையினரை பார்த்தவுடன் அந்த கும்பல் சம்பவ இடத்தில் "புதிய ஏற்பாடு" புத்தகங்களை அதே இடத்தில வைத்து விட்டு, அவர்கள் ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட அறிவிப்பில்: திருப்பூர் காவிலிபாளையம்புதூர் ஆரம்பப்பள்ளியில் மாணவர்களுக்கு கிறிஸ்துவ கும்பல் புதிய ஏற்பாடு புத்தகம் விநியோகிப்பது தகவல் தெரிந்து பொறுப்பாளர்கள் அங்கு சென்றனர்.தகவல் அறிந்த கும்பல் ஓடி மறைந்தது விநியோகிக்க பட்ட புதிய ஏற்பாடு திரும்ப பெறப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News