Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து மாணவிக்கு நீதி வேண்டி இந்து இளைஞர் முன்னணி அமைப்பு அறிவித்த நூதன போராட்டம்!

இந்து மாணவிக்கு நீதி வேண்டி இந்து இளைஞர் முன்னணி அமைப்பு அறிவித்த நூதன போராட்டம்!

DhivakarBy : Dhivakar

  |  23 Jan 2022 7:46 AM GMT

தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாணவிக்கு, நீதி வேண்டி இந்து இளைஞர் முன்னணி அமைப்பு மாநிலம் தழுவிய போராட்டம் அறிவித்துள்ளது.


தஞ்சையில் தூய இருதய மேல்நிலைப்பள்ளி என்ற கிறிஸ்துவப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த இந்து மாணவியை கட்டாய மதமாற்றத்திற்கு வற்புறுத்தியதால் அம்மாணவி தற்கொலை செய்து கொண்டார். இப்பிரச்சினை நாடுமுழுவதும் பேசுபொருள் ஆகியது. சமூக வலைதளங்களில் பலரும் அம் மாணவிக்கு நீதி வேண்டியும், கட்டாய மதமாற்றத்தை வற்புறுத்திய அப்பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


தமிழகத்தில், தமிழக பா.ஜ.க கட்சியும், இந்து முன்னணி அமைப்பும் மாணவிக்கு நீதி வேண்டி பல கண்டனக் குரல்களை எழுப்பி வருகிறது.


இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பின் கிளை அமைப்பான இந்து இளைஞர் முன்னணி அமைப்பு, இறந்த பள்ளி மாணவிக்கு நீதி வேண்டி 27.01.2022 வியாழக்கிழமை அன்று மாநிலம் தழுவிய கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News