Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பூரில், இந்து மக்களை மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி வந்த பாதிரியார்! இந்து முன்னணியின் அதிரடி நடவடிக்கை!

திருப்பூரில், இந்து மக்களை மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி வந்த பாதிரியார்!  இந்து முன்னணியின் அதிரடி நடவடிக்கை!

DhivakarBy : Dhivakar

  |  5 Feb 2022 1:45 PM GMT

திருப்பூர்: இந்து மக்களிடம் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி வரும் கிறிஸ்தவ பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி அமைப்பு காவல்துறையிடம் புகார்.


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதக் கட்டாய மதமாற்ற செயல் எல்லா இடங்களிலும் அரங்கேறி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

பொது இடங்களில், பொதுமக்களை முக்கியமாக இந்து மக்களை குறிவைத்து, பைபிள் மற்றும் துண்டு பிரசுரங்களை மதமாற்ற கும்பல் விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் சாலையூர் என்றபி கிராமத்தில், கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் ஜெபக் கூடம் அமைத்து, இந்து மக்களை குறிவைத்து மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஜெபக் கூடத்தை அகற்ற வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணி அமைப்பு புகார் அளித்துள்ளது.


சமீபகாலமாக தமிழகத்தில் பல இடங்களில் சட்டவிரோதக் கட்டாய மதமாற்ற செயல் அரங்கேறி வருவதும், அதற்க்கு எதிர்வினையாக இந்து முன்னணி அமைப்பு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதும் வழக்கமாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News